Posts Tagged ‘ஷெரின்’

என் நாயை நன்றாக கவனித்துக் கொள்பவர் தாம் எனக்கு கணவராக வரமுடியும் – நல்லா சமைக்க தெரிந்த, வீட்டை சுத்தமாக வைக்க தெரிந்த தமிழ் ரசிகரை கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்”!

திசெம்பர் 30, 2011

என் நாயை நன்றாக கவனித்துக் கொள்பவர் தாம் எனக்கு கணவராக வரமுடியும் – நல்லா சமைக்க தெரிந்த, வீட்டை சுத்தமாக வைக்க தெரிந்த தமிழ் ரசிகரை கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்”!

sherin-spicy-pose-photo-shootஇயக்குனர் ஆசையில் அபாய நடிகை! “துள்ளுவதோ இளமை” படத்தின் நாயகி ஷெரீன் “அபாயம்” படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார். “டேன்ஜர்”

ஷெரின் ஶ்ரீருங்கார் என்ற கன்னட நடிகை மே 5, 1985ல் பிறந்தவர். அலி என்ற முஸ்லீம் மற்றும் யசோதா என்பவருக்கும் பிறந்தவர். பெங்களூரில் பிறந்து, வளர்ந்து, படித்து மாடலாக இருந்து வந்தார். பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் “அபாயமாக” தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாவம், ஏதோ தமிழில் “அபாயமே” இல்லத மாதிரி! அந்த நடிகைக்கு தான் டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டு சொன்னதை இப்படி தமாஷாக “நக்கீரன்” நக்கலடித்துள்ளார்[1]. அவர் ஏற்கெனெவே பலான படத்தை எடுப்பதில் கூட வல்லவர் என்று நிரூபித்துள்ளார்.

ஷெரின் காணவில்லை என்று நிருபர்களுக்கு கவலையாம்: ஷெரின் காணாமல் போன மாயம் பற்றி நிருபர்கள் கேட்ட போது, ”நான் இத்தனை நாட்கள் ஆஸ்திரேலியாவில் “ட்ராயிங் மற்றும் ஸ்கிரீன் பிளே கோர்ஸ்” (பாருங்கள் நமது நிருபர்களுக்கு, இதனை தமிழில் எழுதமுடியவில்லை போலும்) படிக்க சென்றிருந்தேன்.  வந்ததும் நல்ல கதையம்சம் கொண்ட படமாக அபாயம் வந்ததால் அதில் நடித்தேன். என் படிப்பு  இன்னும் முடியவில்லை. அதை முடித்துவிட்டு தமிழ் டைரக்டர் கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலைக்கு சேர்ந்து நல்ல டைரக்டரா ஆகணும்.”, என்று கூறியுள்ளார்[2]. பாவம், தமிழ் நிருபர்களுக்கு, நடிகைகள் காணாமல் போனது தான் கவலையளிக்கிறது போலும். அப்படியென்ன அவர்கள் தருகிறார்கள்? கவரா, பரிசு பொருட்களா, ஹோட்டலில் பார்ட்டியா அல்லது வெறேதையாவது விஷேசமாக கொடுக்கிறாரா?

sherin shringar - 11111என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம்: ஷெரீன் சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தார். அப்போது, “உங்களது காதல் என்னாயிற்று?  ஒரு பாய் ஃபிரண்டுடன் சுற்றிக்கொண்டு இருப்பதாக நியூஸ் வந்திச்சே?”, என நிருபர்கள் கேட்டதற்கு, “எனக்கு நிறைய பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள்? என கேட்டதோடு, என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம்”, என்றும் கூறியுள்ளார். பாவம், அப்படி கிளரத்தான் அவர்கள் வந்தார்களோ? நித்தி என்ற போது ஜொல்லு விட்டுக் கொண்டு, படுக்கையறையிலேயே “புளூ பிளிம்” எடுத்தார்களே, இதையெல்லாம் எப்படி விட்டு வைத்தார்கள்?

ஆகா, இவர்களுக்குத் தான் தெரியும் போல – அவர் ஓபன் டைப்பா, இல்லை குளோஸ்ட் டைப்ப என்று. எது இருந்தாலும் விட்டு வைக்க மாட்டார்கள் போலும். தமிழ் ரசிகர் வேண்டும் என்கிறாரே, அப்ளிகேஷன் போட வேண்டியதுதானே?

 “பெட் டாக்”குக்கு நாய் என்றால், மற்றதற்கு யார்? படுக்கையறை பேச்சிற்கு நாய் தான், என்றால், மற்றதற்கு யார்? “ஹாஹா….. ஹா…ஹா…. (முத்து பல் தெரிய

சிரிக்கிறார்) ஒரு பாய் ஃபிரண்டா? எனக்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் என்னோட பெட் டாக் வெண்ணிலாதான். இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. நல்லா சமைக்க தெரிந்த, வீட்டை சுத்தமாக வைக்க தெரிந்த தமிழ் ரசிகரை[3] கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்”, என்ற ஷெரின் அநியாயத்திற்கு ஓபன் டைப்பாக இருக்கிறார்[4]. அதாவது வேலைக்கரனுக்கு ஒரு தமிழனைத் தேடுகிறார் போலும்!

sherin shringarஎன் நாயை நன்றாக கவனித்துக் கொள்பவர் தாம் எனக்கு கணவராக வரமுடியும்! ஒருவழியாக, இப்படி உண்மையைச் சொல்லியுள்ளார், “மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி பெண் நாய் குட்டி வெண்ணிலா தான் என்றார். அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும்[5]. மற்றபடி நான் அவரிடம் எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்”, என்று கூறியுள்ளார் ஷெரீன்[6].  அதாவது, அவரும் அதேப்போல, நாயைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான், ஷெரினிடம் எதுவும் கிடைக்காது. நாயுக்கு முத்தம் கூட கிடைக்கும், ஆனால், நாயை கவனிப்பவருக்கு எதுவும் கிடைக்காது.

நடிகையின் நாய், சிலிகான் பொருத்திய மார்பகத்தில் ஏடாகூடமாக பாய்ந்து, காயம் ஏற்படுத்தி விட்டது: முன்பு இப்படியொரு செய்தி வந்தது. மார்பக சீரமைப்புக்காக சிகிச்சை செய்துகொண்ட, மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவருக்கு, அவர், செல்லமாக வளர்த்த நாயால், தொல்லை ஏற்பட்ட விவகாரம், நுகர்வோர் கோர்ட்டில், அவர் தொடர்ந்த வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர், மும்பை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த நடிகை, பாலிவுட் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிரபலமான மாடலும் ஆவார். (இந்த நடிகையின் பெயரை, நுகர்வோர் கோர்ட் வெளியிடவில்லை) கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

பார்கவா நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில், மார்பக சீரமைப்புக்காக சிகிச்சைக்காக சேர்ந்தேன். டாக்டர்கள் சந்தீப் சர்மா, பாலி சிங் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். எனக்கு மார்பகத்தை எழிலாக்க “சிலிகான் ஜெல்’ பொருத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில், என் மார்பகத்தில் வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்கு சென்று, என் பிரச்னையை கூறினேன். பரிசோதனை செய்த டாக்டர்கள், மார்பகத்தில் சிலிகான், சரியாக பொருத்தப்படவில்லை என்றும், அதனால் தான் வலி ஏற்பட்டுள்ளது என்றும் கூறி, சிலிகானை அகற்றினர். டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான், மார்பக அறுவை சிசிச்சை சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக, ஏராளமான பணத்தை செலவு செய்தும், சிகிச்சை சரியாக செய்யப்படாததால், அனைத்தும் வீணாகி விட்டது. எனவே, எனக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த நடிகை, தன் மனுவில் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

சம்பந்தப்பட்ட நடிகைக்கு, மிகவும் கவனமாகவும், உரிய மருத்துவ முறைப்படியும், சிகிச்சை அளித்தோம். சிகிச்சைக்காக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

இவர் இப்படி நாயை வைத்துக் கொண்டு பிரச்சினை பண்ணியிருக்கிறாரே? என்ன செய்ய. நாய்கள் பொதுவாகவே, தோல், ரப்பர், பிளாச்டிக் முதலியவற்றைக் கடித்துக் கொண்டுதான் இருக்கும். அப்படி பட்ட நிலையில், நடிகை ஏன் அதை நாயுக்குக்  காட்டிக் கொண்டிருக்க வேண்டும்?

செய்யப்பட்ட தரமான சிலிக்கான் ஜெல் மற்றும் உபகரணங்களைத் தான், இதற்கு பயன்படுத்தினோம். சிகிச்சை முடிந்த, அடுத்த இரு நாட்களில், மருத்துவமனைக்கு வந்த, அந்த நடிகை, தான் செல்லமாக வளர்த்து வந்த நாய், சிலிகான் பொருத்திய மார்பகத்தில் ஏடாகூடமாக பாய்ந்து, காயம் ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். நாயால் ஏற்பட்ட தொல்லை காரணமாக பிரச்னை ஏற்பட்டது. அப்பகுதியில் காயமும், கீறலும் காணப்பட்டன. அவருக்கு பொருத்தியிருந்த சிலிகானை, அகற்ற வேண்டியதாகி விட்டது. இதுதான், உண்மையில் நடந்தது. ஆனால், அந்த நடிகை, எங்களிடம் பணம் பறிப்பதற்காக, கோர்ட்டில் பொய்யான காரணங்களை கூறி, வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, மும்பை நுகர்வோர் கோர்ட் தலைவர் தேஷ்பாண்டே மற்றும் உறுப்பினர் பிட்நுர்கர் ஆகியோர், தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: நடிகை வளர்த்த நாயால் தான், அவருக்கு பிரச்னை ஏற்பட்டது என்ற, மருத்துவமனை நிர்வாகத்தின் ஆதாரமான வாதத்தை மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கு, நடிகைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோதும், அவர் சார்பில், கோர்ட்டில், இதை மறுத்து பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையின்போது, தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராவதையும், நடிகை தவிர்த்து வந்தார். மேலும், தவறான சிகிச்சை காரணமாகவே, தனக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது என்பதை அவர் உறுதி செய்ய ஆவணங்கள் தரவில்லை. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது. ஏனெனில் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதற்கு, டாக்டர்கள் பொறுப்பின்மை என்று முடிவு செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

 

வீட்டுக்கொரு நாய் வளர்ப்போம்: நடிகை த்ரிஷா[7]: நடிகை த்ரிஷா திரைப்படங்களில் நடிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து, பரிசு பொருட்களை வழங்கி வருகிறார். இப்பொழுது தன்னுடைய திருமணம் பற்றி வேறு ஒரு கருத்தினை முன்வைத்திருக்கிறார். ‘நான் மிருகங்களை அதிகம் நேசிப்பவள். என்னுடைய வீட்டில் ஏராளமாக நாய்கள் இருக்கின்றன. இவற்றினை அன்பாக கவனிக்கக்கூடிய ஒருத்தர்தான் எனக்கு கணவராக அமையவேண்டும் என காத்திருக்கிறேன்‘ என திரிஷா கூறியிருக்கிறார்[8].

இப்படி நடிகைகள் நாய்களிடம் பிரியமாக இருப்பது, ஆராய்ச்ச்சிற்குரிய விஷயமாகிறது. மேலை நாட்டு நடிகைகள் எப்பொழுதுமே நாய்களுக்காக எதையும் செய்வார்கள். தமது காதலர்கள், கணவன்களையே தூக்கியெரிவார்கள். அதே மாதிரி, இந்திய நடிகைகளும் காப்பியடிக்கிறர்களா அல்லது மனோதத்துவ ரீதியில், நாய்களிடம் யாதாவது பிடிப்பு உள்ளதா என்று ஆராய வேண்டும்.

நாய்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். அவருடைய வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். அதில் ஒன்று, தெரு நாய். ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் சென்றிருந்தபோது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு ரோட்டு ஓரம் கிடந்தது. அதை காப்பாற்றி நடிகை அமலா நடத்தி வரும் தெரு நாய் முகாமுக்கு கொண்டு சென்றார். அடிபட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தபின், அந்த நாய்க்குட்டியை ஒரு கூடையில் வைத்து விமானம் மூலம் சென்னை கொண்டுவந்து விட்டார். அன்று முதல் அந்த நாய்க்குட்டி, திரிஷா வீட்டில் செல்லமாக வளர்ந்து வருகிறது. திரிஷாவின் இந்த சேவை பற்றி கேள்விப்பட்ட பேடா என்ற நாய்கள் நல அமைப்பு அவரை பாராட்டியதுடன், சென்னையில் நடத்த இருக்கும் நாய்கள் நல முகாமில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டது. இந்த முகாம் நாளை  சென்னை பார்க் ஓட்டலில் நடைபெறுகிறது. அந்த முகாமில் த்ரிஷா,  வீட்டுக்கொரு தெரு நாயை எடுத்து வளர்த்தால், தெரு நாய் தொல்லைகளே இருக்காது என்று அந்த முகாமில் அவர் பேச இருக்கிறார். தெரு நாய்களை எடுத்து வளர்க்கும்படி, தனது ரசிகர்களுக்கும் அன்பான வேண்டுகோள் விடுக்க முடிவு செய்து இருக்கிறார். “இந்திய நாய்களை விரும்புங்கள். நாய்களை வாங்காதீர்கள், தத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்ற அறிவிப்புப் பலகையை ஏந்தி போஸும் கொடுத்தார்[9].


 


[5] நக்கீரன், என் நாயை நன்றாக கவனித்துக்கொள்பவர்தான் எனக்குகணவராகவரமுடியும் : நடிகைஷெரின், http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=67967

[9] Beaming a smile, she posed with a dog mascot with a heart shaped placard reading, “Love Indian dogs, Adopt don’t buy”.

http://www.dnaindia.com/entertainment/report_tamil-actress-trisha-makes-appeal-to-look-after-stray-dogs_1395195