Archive for the ‘இடைக் கச்சை’ Category

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

ஏப்ரல் 26, 2016

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

can beggars start dancing

மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள்,  நாடக அரங்குகள்,  கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].

India has been haven for pedophilesமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. மதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
  2. இரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
  3. மதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
  4. அழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
  5. அழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.
  6. 25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.
  7. 25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  8. லைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].

give us money - prostitution or just beggingமார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

neither begggar nor prostituteபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.

மும்பை நடன பெண்கள்.6பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8].  தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர்.  மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9]. 

 mumbai_dance_bars_dancers_640x360_bbc_nocredit

பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே? பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும்? ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா? யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்?

© வேதபிரகாஷ்

26-04-2016

[1] http://www.vikatan.com/news/india/63085-better-to-dance-than-to-beg-says-supreme-court.art

[2] விகடன், பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!, Posted Date : 18:41 (25/04/2016)

[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.

[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/license-for-women-dance-bar-supreme-court-116042500041_1.html

[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)

[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24

[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/25154616/1008388/Better-to-dance-in-bars-than-beg-on-streets-Supreme.vpf

[9] http://ns7.tv/ta/nasty-not-act-dancing-supreme-court.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508964

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1509337

மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, ஒழுக்கம் எல்லாம் மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது வரும்?

மார்ச் 13, 2012

மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, ஒழுக்கம் எல்லாம் மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது வரும்?

சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. இந்த தலைப்பில் ஏற்கெனவே விவரமாக ஒரு இடுகையில் விவரித்துள்ளேன்[1]. சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. ஓட்டகளில்

 ……………………சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது[2]மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு!

இது இப்பொழுது, பல்வேறு பெயர்களில் நாகரிகமாக நடந்து வருகிறது. பணம் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், அனுபவுக்கலாம் என்ற முறையில்  வளர்த்துவிட்ட நவீனக் காமக்கலைதான், பாடி மஸாஜ். 1979-1980களில் இது சென்னையில் அத்தகைய மோசமான நிலைக்குச் சென்றபோது, தடை செய்யப்பட்டது. அப்பொழுது வீட்டுக்கு வீடு மசாஜ் சென்டர், மசாஜ் பார்லர் என்ற பெயரில் ஆரம்பித்து பிறகு விபச்சாரமாக மாறியது. அப்பொழுதே, சபலமுள்ள பள்ளி-கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று வந்தபோது, பிரச்சினை பெரியதாகி தடை செய்யப்பட்டது. குறிப்பாக, அரசியல்வாதிகள் சிலர் அதில் சம்பந்தப்பட்டதால், விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது.

பாடி மஸாஜ் பல ரூபங்களில்: இப்பொழுது, பப்புகள் பெயரில், ஸ்பா, ஹெல்த் கிளப், அரோமா தெராபி, அக்யூபிரஸ்ஸர் சென்டர், ஆயுர்வேதிக் சென்டர், என்று பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. குறைந்த சம்பளம் கொடுப்பது,

 …………………கற்ப்பைப் பற்றி கேவலமான கருத்துகளைச் சொல்லும்[3] போது, விபச்சாரம் பெருகத்தானே செய்யும்? தார்மீகம் எங்கு இருக்கும்? இருப்பினும் “நடிகைகளின் கற்ப்பைப்” பற்றி பேசினால், நடிகைகளுக்கு கோபம் வருகிறது[4].

மறைமுகமாக தொல்லைக் கொடுப்பது, பாஸ்போர்ட்டைப் பிடுங்கி வைத்துக் கொள்வது, கஸ்டமர்களை அளவிற்கு அதிகமாக தொல்லைக் கொடுக்க செய்வது, அவ்வாறு செய்தாலும் பொறுத்துப் போக சொல்வது, அவ்வாறு செய்யும் காட்சிகளை படமெடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது, முதலியன அவர்களுடைய வழக்கமான வேலைகள். இதே முறைகள் தாம் இப்பொழுதும் பின்பற்றியது தெரிகிறது. ஆக, வருடங்கள் மாறினாலும், குற்றவாளிகளின் புத்தி மாறவில்லை என்பது தெரிகிறது. மேலும், சில பெண்களுக்கும் இந்த வியாதி பிடித்துக் கொண்டது. ஆமாம், ஆண்கள் பெண்களுக்கு பாடி மஸாஜ் செய்கிறேன் என்று கிளம்பி விபரீததில் முடிந்து விட்டது. இப்பொழுது வெளிவந்துள்ளது வெறும் துளிதான், இன்னும் பெரிதாக இருக்கிறது, என்று கூறியிருந்தேன்.

கிழக்குக் கடற்கரைச் சாலை விபச்சாரம் மிகவும் பிரசித்தியானது. ஏனெனில், இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மிகவும் பெரியவர்கள் என்பதனால், பல தடவை கண்டு கொள்ளமலும் இருந்திருக்கின்றனர்.

 …………………..two people from Kerala were running a fake ayurvedic spa in Injambakkam on East Coast Road. A special team, which was monitoring the activities of the spa, raided it and arrested Dilip alias Manoj (29) and Sibin Jacob (23). “They pretended to offer massages but were running a brothel,” the police said[5]. வழக்கமான பாணியைப் பின்பற்றிய மசாஜ் பெண்கள் சிக்கிக் கொண்டனர்.

இப்பொழுது மறுபடியும் அத்தகைய செய்தி வந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று பாலியல் புரோக்கர்களை காவல் துறையினர் கைது செய்து அத்தொழிலில் ஈடுபட உள்ள பெண்களையும் மீட்டனர் (24-02-2012). இண்டர்நெட் மூலம் மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவர்ந்து விபச்சார தொழில் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங் ஆணையின்படி சென்னை மத்திய குற்றப்பரிவு துணை ஆணையாளர் டாக்டர். எம். சுதாகர் ஆகியோர் அறிவுரைகளின்படி, சென்னை விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் எம்.கிங்ஸ்லின் மேற்பார்வையில் ஆய்வாளர் எஸ்.சாண்டியாகோ தலைமையில் போலீஸ் பார்ட்டியினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்

cutz n glitz, a unisex n salon : இவையெல்லாம் பெரிய இடத்து சமஜாரங்கள் தாம். சென்னை பனையூர் பகுதியில் இ.சி.ஆர்.சாலையில் cutz n glitz, a unisex n salon என்ற பெயரில் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட மசாஜ் செண்டரில் செல்போன் எண்ணிற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் போன் செய்து வாடிக்கையாளர் போல் பேச்சுக் கொடுத்தபோது மறுமுனையில் பேசிய நபர் நவீன முறையில் மசாஜ் செய்கிறோம், அதோடு தாங்கள் விருப்பப்பட்டால் அங்கு மசாஜ் செய்யும் வெளி மாநில அழகிகளில் ஒருவருடன் உல்லாசமாக இருக்க ரூ.10,000/- செலவாகும் என்றும், குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் வருமாறு கூறினார்[6]. டிப்-டாப் உடையில் சென்ற விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரை, வாடிக்கையாளர் என தவறாக நினைத்து இ.சி.ஆர்.ரோட்டில் கடற்கரை ஓரம் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் உள்ள மேற்படி மசாஜ் செண்டருக்கு அழைத்து சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற விபச்சார தடுப்பு பிரவு ஆய்வாளர் மேற்படி இடத்தில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக அங்கு புகுந்து விபச்சாரம் நடத்தி வந்த சீனிவாசன் (34), ராம்குமார் (36), மற்றும் சரவணன் (31) என்பவர்களை கைது செய்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த மும்பையை சேர்ந்த ஐந்து இளம் அழகிகளை மீட்டனர்.

கைதுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒழுக்கம் வருமா? போலீசாரின் விசாரனையில் சீனிவாசன் என்பவர் மேற்படி மசாஜ் – ஸ்பா செண்டரின் உரிமையாளர் என்பது

 வழக்கம் போல செய்திகள் வருவது, கைது செய்வது எல்லலம் சரிததன். ஆனால், கற்பு, ஒழுக்கம் என்றெல்லலம் பேசுகின்ற தமிழச்சிகள், இனமான வீரர்கள், மடலேறு-அடலேறுகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

தெரியவந்தது. மேற்படி சொகுசு பங்களாவை அவர் மாத வாடக்கைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி பங்களாவின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாக தெரியவந்தது. வாடிக்கையாளர்கள் மனம் கவரும் வகையில் மிகவும் ஆடம்பரமான முறையில், உள் அலங்காரத்துடன் உல்லாசமாக இருக்க அந்த பண்ணை வீட்டை விபச்சாரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

வேதபிரகாஷ்

13-02-2012


சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு!

ஜனவரி 9, 2012

சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு!


மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம்: மேனாட்டு கலாச்சாரத்திற்கு முழுவதுமாக அடிமையாகி விட்ட நிலையில், இன்று மது-மாது இரண்டுமே தேவை என்ற விஷயமாகி, அவற்றைக் கொடுக்கவும் வியாபாரிகள் தயாராகிவிட்ட நிலையில், விபச்சரத்தைப் பற்றி விவாதிப்பது வேடிக்கையான விஷயமே[1]. கோலிவுட் விபச்சாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சினிமாக்களில் ஜோக்ஸ் என்ற பெயரில் உடலுறவப் பற்றி கொச்சையாக, வெளிப்படையாக சொல்லித் தரப்படுகிறது. அதற்கேற்றாற் போல கேமராக்களும் விரைவாக நகர்ந்து காட்ட வேண்டியதை காட்டவே செய்கிறது. அதனால், தெரியாதவர்களும், தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. பிறகு, பார்ப்பதை செய்து பார்க்க விரும்புகிறது மனம். இந்நிலையில் விபச்சாரம் வியாபாரமாகிறது. சில நேரங்களில் பொழுதுபோக்காக்கிறது[2]. சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் சுலபமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது மற்றும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது சுலபமன வேலையாக பலருக்கு இருக்கிறது. “நடன கலைஞர்கள் சங்கம்”, “துணை நடிகைகள் சங்கம்”, “நடன நடிகைகள் சங்கம்”, “சினிமா பயிற்சி சங்கம்” என்ற போர்வையில் இவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. முன்பு “பாடி-மசாஜ்” சாதாரணமாக இருந்தது[3].

வியாபார நிமித்தம் வருபவர்கள் வெளிப்படையாகவே கேட்கும் அளவிற்கு வந்து விட்ட நிலையில், சில ஹோட்டல்களில் அதற்கான புரோக்கர்கள் இருந்து செயல்படுகிறர்கள். நட்சத்திர ஹோட்டல்களில் நாகரிகமாக நடந்து முடிந்து விடுகிறது. மற்ற நிலைகளில் வெளிப்படும்போது, அகப்பட்டுக் கொள்கிறார்கள். குறிப்பாக மொபைல்போன் மூலமும், இணைத்தளங்கள் வழியாகவும் தொயர்பு கொண்டு ஏற்பாடு செய்வதால், அகப்படாமலும் தப்பித்து விடுகின்றனர். கடந்த டிசம்பரில் இணைத்தளம் மூலம் விபச்சாரம் செய்து வந்த பெண்ணை, போலீஸார் கைது செய்தனர்[4]. பல நேரங்களில் விபச்சாரம் கடனை அடைக்கும் வழியாகவும் பயன்படுத்துகின்றனர்[5]. அதற்காகவே “நிதி நிறுவன ஆலோசகர்கள்” வேலைசெய்து வருகிறார்கள். இதில் பிளாக்-மெயில் செய்யும் வேலையும் இணைந்து விடுகிறது. விபச்சாரத்துடன் புருனோகிராபியும் சேர்ந்து விடுகிறது[6]. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், சிலர் எல்லாவிதமான குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். அரசியலும் கலக்கும் போது, சட்டங்கள் மீறப்படுகின்றன[7]. கற்ப்பைப் பற்றி கேவலமான கருத்துகளைச் சொல்லும்[8] போது, விபச்சாரம் பெருகத்தானே செய்யும்? தார்மீகம் எங்கு இருக்கும்? இருப்பினும் “நடிகைகளின் கற்ப்பைப்” பற்றி பேசினால், நடிகைகளுக்கு கோபம் வருகிறது[9].


விபச்சாரத் தடுப்பு போலீஸாரின் நடவடிக்கை: சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்[10]. சினிமா பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்[11]. சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை வைத்து, அத்தகைய புரோக்கர்கள் சிலரிடம் வாடிக்கையர் போல பேசி, பெண்களைக் கேட்டனர்.  மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் போல் சென்ற பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் சரோஜினி தெருவில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்[12]. அவர்களை பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.


திரைப்படம் தயாரிப்பவர் விபச்சாரத்தையும் தொழிலாக செய்கிறாராம்: விசாரணையில் செல்வ நாயகன் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போது ‘பேசாதே’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


குடும்ப பெண்கள் சீரழியும் போக்கு – பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர்[13]. சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வாழ்க்கை, கைகளில் கரன்சி, விதவிதமான உடைகள், கூடவே உல்லாசம் என சைத்தான்கள் ஓதும் வேதத்தை கேட்டு படுகுழியில் விழுகின்றனர் குடும்பப் பெண்கள்.

வாழ்க்கை பறிபோகும்: பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைப்பதோடு உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமே சென்னை எம்.ஜி.ஆர் நகர். ஆவடி திருமுல்லை வாயலில்[14] நடைபெற்ற பெண்களின் கொலைகள். இந்த இரண்டு கொலைகளுமே கணவர், குழந்தைகளோடு குடும்பம் நடத்தும் பெண்கள் சறுக்கியதாலேயே உயிரிழந்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றியதே திருமுல்லைவாயில் யாஸ்மினுக்கு எமனாக மாறிவிட்டது.

போலீஸ் அதிரடி நடவடிக்கை: இந்த இரண்டு கொலைகளுக்குப் பின்னர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த இரண்டு நாட்களாக குடும்பப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.  பெரம்பூர் ஜமாலியா எஸ்.பி.ஓ.ஏ. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மீனா என்ற 37 வயது பெண், ஆன்லைன் மூலம் குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து மாறு வேடத்தில் வாடிக்கையாளர் போல சென்ற விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மீனாவையும் அங்கிருந்த இரண்டு குடும்பப் பெண்களையும் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்களை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் திருந்த என்ன செய்வார்கள்?

வீட்டை உல்லாச விடுதியாக்கினார்: மீனா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாபு ஆந்திராக்காரர். மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வரும் மீனா, இதுபோன்று குடும்ப பெண்களை வரவழைத்து வீட்டை உல்லாச விடுதியாக மாற்றியதும் தெரிய வந்தது. இதற்காக தான் வாடகைக்கு இருந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டு அவர் பணம் சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல அசோக் பில்லர் அருகே விபச்சாரம் செய்த தனம் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவைச் சேர்ந்த திலீப், சபின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.

கலாச்சார சீரழிவு – காரணம் ஏன், தீர்வு என்ன – சொல்வதில்லையே?: சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பங்களாக்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். என்னத்தான் கலாச்சார சீரழிவு என்று காரணம் சொன்னாமல், கலாச்சாரத்தைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதில்லையே?

சென்னைக்கு அடுத்து கோவை: கோவை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த டி.வி. நடிகை உள்பட 6 பெண்களையும் 2 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர்[15]. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்களில் விபசாரம் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து சிவி, சினிமா துணை நடிகைகள் பலர் இந்தப் பங்களாக்கு வந்து போவதாக தகவல் கிடைத்தது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையம் வி.ஜே.நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு இரவு நேரத்தில் விலை உயர்ந்த கார்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த பங்களாவுக்கு விலை உயர்ந்த 3 கார்கள் சென்றன. உடனே போலீசார் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அழகிகளும், வாடிக்கையாளர்களும் இருந்தனர்.  இதையடுத்து அங்கு இருந்த அழகிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்த போது சென்னையை சேர்ந்த டி.வி.நடிகை ஸ்ரீலட்சுமி (வயது 21), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டான்சர்கள் சிந்து (20), ஷீபா (21), கேரளாவை சேர்ந்த காயத்திரி மற்றும் ஆந்திராவை சேர்ந்த கவிதா (21) என தெரியவந்தது. மற்றொரு அறையில் இருந்த வேலைக்கார பெண் லட்சுமி (41), புரோக்கர்கள் பாலாஜி (38) மற்றும் கிருஷ்ண மூர்த்தி (47) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இன்டர்நெட் மூலம் அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அனுப்பி வைக்கும் புரோக்கர்கள்: விசாரணையில் பாலாஜியும், கிருஷ்ணமூர்த்தியும் புரோக்கர்கள் எனவும், இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அழகிகளை அனுப்பி வைப்பார். ஒரு அழகியை அழைத்து சென்றால் 5 நாட்கள் வரை அவர்களை இஷ்டப்படி அனுபவிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். 5 நாட்களுக்கும் அவர்களை எங்கு வேண்டும் என்றாலும் அழைத்து போகலாம், என்ற உத்தரவாதம் கொடுத்த பின்னரே அழகிகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்தப் பெண்களை அழைத்துச் செல்ல இடம் இல்லாத வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த சொகுசு பங்களாவுக்கு வந்தால் போதுமாம். அங்கு அவர்களுக்கு பிடித்த அழகிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் விரும்பும் உடை, தேவையான சேவை, அதற்கான ஊதிய பங்கீடு: அங்கு வாடிக்கையாளர்கள் மனம் நோகாதபடி, அவர்களின் தேவை அறிந்து அழகிகள் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்த உடை அணிந்து கொள்வார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மகிழ்வித்து ஒத்துழைப்பார்கள். இதற்காக ஏதாவது கல்லூரிகள் கூட நடத்தப் படுகின்றனவோ என்னமோ? வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூ.50 ஆயிரத்தில் புரோக்கர்கள் ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொள்வார்கள். மீதி ரூ.25 ஆயிரம் இந்தப் பெண்களுக்கு.  அழகிகள் கைது செய்யப்பட்ட அறையில் இருந்து 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


[8]

அவுத்துப் போட்டு ஆடத் துடிக்கிறார்கள் தமிழ் நடிகைகள்: அறந்தை நாராயணன்!

செப்ரெம்பர் 18, 2011

அவுத்துப் போட்டு ஆடத் துடிக்கிறார்கள் தமிழ் நடிகைகள்: அறந்தை நாராயணன்!


அறந்தை நாராயணன் என்ற சினிமா எழுத்தாளர் இப்படி 35 வருடங்களுக்கு முன்பு எழுதியபோது, பல நடிகைகள் கோபம் கொண்டார்கள். ஆனால், இப்பொழுது அப்படி விமர்சித்தால் மகிழ்வார்கள் எனலாம். “குத்தாட்டம்” என்ற பெயரில் நிர்வாண ஆட்டங்களை ஆடி, அதற்கு ஆபாசமாக கவிக்கோக்கள் / கவிப்பேரரசுகள் பாட்டுகளை எழுதி, பெரிய பாடகர்கள் அரைகுறை தமிழில் பாடி, இவற்றையெல்லாம் டிவி செனல்களிலேயே காட்டிய பிறகு, நிர்வாணத்தைப் பற்றியும், கற்பைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மேலும் இந்த அசிங்கங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு விருதுகள் வேறு கொடுக்கிறார்கள். உடனே அந்த ஆபாசக்கும்பிகள், ஏதோ தமக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று, எல்லைகளை மீறி ஊழலைப் பெருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பணம் கொடுத்தால் சரிதான் என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. இருப்பினும், ஒரு நடிகை இப்படி சொல்லியிருப்பது நோக்கத்தக்கது.

விக்ரமுடன்குத்தாட்டம்போடரூ.1கோடிஹன்சிகாமறுப்பு!! “ராஜபாட்டை” படத்தில் விக்ரமுடன் ஒருபாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ.1 கோடி தர சம்மதித்தும், அதனை மறுத்துவிட்டார் ஹன்சிகா மோத்வானி. “தெய்வத்திருமகள்” படத்திற்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் படம் “ராஜபாட்டை”. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தில் அசத்தலான ஒரு குத்துபாடல் ஒன்று இருக்கிறதாம். இதுவரை குத்து பாடலுக்கு ஆடாத ஒருவரை இப்பாடலுக்கு ஆட

ஒரு நடிகை பணத்திற்காக நடிக்க வரவில்லை, என்பது  உண்மையா இல்லையா என்பது நடிக்க வரும் நடிகைகளுக்கேத் தெரியும். கவர்ச்சியைக் காட்ட மாட்டேன் என்று, பிறகு அந்த காட்சிற்கு அது தேவைப் பட்டதால் காட்டினேன் என்று தொழில் ரீதியிலான விளக்கமும் கொடுப்பார்கள்.

வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்களாம் படக்குழுவினர். இதற்காக ஹன்சிகாவை அணுகி, ரூ.1 கோடி வரை தருவதாக கேட்டார்களாம். ஆனால், அவரோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த மாதிரி பாடலுக்கு எல்லாம் ஆட மாட்டேன் என்று கறாராக மறுத்து விட்டாராம். இது குறித்து ஹன்சிகா கூறியிருப்பது, “நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை. எனது திரையுலக வாழ்வில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நாயகியாக நடிக்காத படங்களில் ஒரு பாடல் ஆட்டத்துக்கு சம்மதிக்க மாட்டேன்.” என்று கூறி இருக்கிறார்

படுக்கையறைக்குஅழைத்தார்சரண்நடந்தசம்பவம்பற்றிநடிகைசோனா[1]: நக்கீரன் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித் திருந்த வைபவ் வீட்டில் இரவு, `பார்ட்டி’ நடந்தது.   அதில் வெங்கட்பிரபு,   பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப் பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட `மங்காத்தா’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். நடிகை சோனா, பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சரணும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்கள்.

 

நடிக-நடிகைகள் இப்படி இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது, குடிப்பது, கும்மாளம் அடிப்பது, தனக்கு வேண்டியவர்களுடன் ரூம்களுக்குள் செல்வது என்பதெல்லாம் ரகசியங்கள் அல்ல.

இந்த பார்ட்டியின் போது சரண், தன்னை படுக்கை அறைக்கு அழைத்தார் என்று நடிகை சோனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.

பலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார். கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது[2].

ஜோக் விபச்சாரம் முதல் கொக்கோக விபச்சாரம் வரை: சோனா படங்களில் ஆபாசமாகத்தான் நடிக்கிறார். மற்ற நிகழ்ச்சிகளில் அரைகுறை உடைகளில் அளவிற்கு மீறித்தான் நெருக்கமாகப் பழகுகிறார்[3]. பிறகு, பெண் அதிலும் நடிகை எனும்போது, கட்டுப்பாட்டுடன் இருந்தால், பிரச்சினை தானே வரும். ஆபாச கொக்கோக டயலாக் கோமாளி விவேக், தத்துவப்பித்து அதிகமாகி விட்டால், சில வார்த்தைகளை உபயோகிக்கக் கூடத் தவறுவதில்லை. அரசு விருதுகள் வரவர, மமதை ஏறி, ஏதோ தான்தான் புரட்சிகர-மறுமலர்ச்சி-தீர்திருத்த நடிகன் போல ஆபாசத்தையே பிழைப்பாக வைத்து பிழைக்கும் விவேக், இந்த சோனாவுடன் “நகைச்சுவை” என்ற பெயரில் அடிக்கும் கூத்து கொஞ்ச-நஞ்சமல்ல. “வார்த்தை விபச்சாரத்தில் வல்லவன்” என்ற பட்டத்தை விவேக்கிற்கு அளிக்கலாம்.

நடிகை-நடிகர்களுக்கு தார்மீகம் பேச அருகதையில்லை: கண்டபடி நடித்து விட்டு, அனாதைகளை தத்தெடுக்கிறேன், பிறந்தநாளை சிம்பிளகக் கொண்டாடுகிறேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை, கற்பு சிறக்காது அல்லது நடிகையின் அங்கங்களைப் பார்ப்பவர்கள் தொடத்துடிக்காமல் இருப்பார்கள். ரசிகர்களே கிள்ளிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்றால், மிகவும் அருகில் இருப்பவர்கள் என்னமெல்லாம் செய்வார்கள் என்று சொல்லவா முடியும். நடிகர்களும் அவ்வாறே, அவர்களுக்கும் இதில் சரியான பங்கு உண்டு.

சினிமாத்துறையினர் என்ன செய்ய வேண்டும்? ஊழலைப் பற்றி பெரிதாக பேசி வருகிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்றெல்லாம் கூட மக்கள் எதிர்த்து போராட கிளம்பி விட்டார்கள். அந்நிலையில், இத்தகய சினிமா ஊழல்களையும் எதிர்த்து மக்கள் போராட வேண்டும். அத்தகைய நிலை உருவாகும் முன்னர், சினிமாத்துறையினர் விழித்துக் கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். அதிலும் ஒரு “அந்நியனை” உருவாக்காமல் இருந்தால் சரி.

  • சமூக பிரக்ஞை, சமூதாய பொறுப்பு, வருங்கால சந்ததியினரின் ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றிக் கவலைப் படுபவர்கள், படுக்கையறையில் நடப்பதை, திரையில் காட்டமாட்டார்கள்.
  • ஆண்-பெண் உடலுறவை தெருநாய்கள் செய்வதைப் போல படம் பிடுத்து காட்டமாட்டார்கள்.
  • கொச்சையான, அசிங்கமான, ஆபாசமான ………ஜோக்குகளை எழுத்தாளர்கள் எழுதமாட்டார்கள்.
  • அத்தகைய ஊழலான பாட்டுகளை, வசனங்களை தமிழில் அல்லது தமி மொழியையே விபச்சாரமாக்கி, ஒரு கேவலமான கலவைமொழியை உருவாக்கி, அதில் வாரி இரைக்கமாட்டார்கள்.
  • நடிகைகள் அப்படியே, அந்த வசனங்கள், நகைச்சுவைக் காட்சிகள், ஆட்டங்கள் முதலிய கூத்துகளுக்குட்பட்டு நடிக்க மாட்டார்கள்.
  • பொறுப்புள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் அத்தகைய விபச்சாரத்தைச் செய்ய மாட்டார்கள்.
  • மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தி வரும், டிவி செனல்கள், கேபிள்-டிவி-காரர்கள் முதலியோர்ம், இந்த விபச்சாரத்தில் ஈடுபட மாட்டார்கள்.

இதில் “கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்” செய்யும் வேலை தேவையில்லை. சினிமாக்காரர்களுக்கும், தாய், சகோதரிகள், மனைவி, மகள்கள் என்றெல்லாம் உள்ளனர் என்பதை நினைத்துக் கொண்டாலே, மற்ற பெண்களை கேவலமாக நடத்த மாட்டார்கள், உடம்பைக் காட்டச் சொல்ல மாட்டார்கள், கேமராக்கள் உரிமையோடு நடிககைகளில் மார்புகள், இடுப்புகள் முதலிய பகுதிகளை நெருக்கமாகக் காட்ட மாட்டார்கள். இல்லையென்றால், மற்ற பெண்களை விடுத்து, சினிமாக்காரர்கள் தங்களது தாய், சகோதரிகள், மனைவி, மகள்கள் முதலியோரை வைத்தே, குடும்பத் தொழிலைப் போல நடத்தலாம். பிறகு லாபங்கள் குடும்பத்துடனே இருக்கும்.

வேதபிரகாஷ்

17-09-2011.

 


[3] அத்தகைய போட்டோகளுக்கு நக்கீரனைப் பாருங்கள்: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=61606

வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!

நவம்பர் 19, 2010

வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!

கமலின் நிஜவாழ்க்கைக் கலவி அனுபவங்கள் கொக்கோகமாகவே வெளிப்படுகின்றன: பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை… ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர்[1].  ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார். அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.

கமலின் அந்தப் பாடல்[2]: நடிகை / சக்காளத்தி விளக்கம்
கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை
ஸ்ரீவித்யா இந்த பாடலை உன்னிப்பாகப் படிக்கும்போது, காமரசம் மேலோங்கி இருந்தாலும், அதன் பின்னணியில், கமல் தன்னுடைய வாழ்க்கையில் அனம்-உடல் போராட்டங்களுடன் சந்தித்த, எதிர்கொண்ட பெண்களைக் குறித்து எழுதியுள்ளது போலத்தெரிகிறது. அதுமட்டுமல்லாது, அந்த பாடல் வரிகளில், கிரமத்தில், அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது எனலாம்.
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
ஸ்ரீபிரியா
கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை
ஸ்ரீதேவி
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
சரிகா
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
வாணி கணபதி
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
சிலுக்கு ஸ்மிதா / சிம்ரன்

கவிஞர் வாலி பாராட்டு: கமல்ஹாசன் எழுதிய இந்த கவிதை (பாடல்) பற்றி கவிஞர் வாலி கூறுகையில், “மன்மதன் அம்பு படத்துக்காக, கமல்ஹாசன் எழுதிய உரைநடை கவிதை இது. தமிழில் நானும், கண்ணதாசனும் இதேபோன்ற உரைநடை பாடலை எழுதியிருக்கிறோம். நான் எழுதிய “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,” இதுபோன்ற பாடல்தான். கண்ணதாசன் எழுதிய “தெய்வமே தெய்வமே”யும் இதுபோன்ற பாடல்தான். கமலுக்கு தமிழிலும் நல்ல அறிவு உண்டு. இசையிலும் நல்ல அறிவு உண்டு. அவர், டி.கே.எஸ்.சண்முகம் அண்ணாச்சியின் நாடகத்தில் இருந்து வந்தவர். தமிழை நன்றாக உச்சரிக்க முடியாதவர்கள், சண்முகம் அண்ணாச்சி நாடகங்களில் நடிக்க முடியாது. ஆக, பால்ய பருவத்திலேயே கமலிடம் தமிழ் அறிவு இருந்தது. ஒரு கவிதையே கவிதை எழுதியிருக்கிறது. கமல்ஹாசன், தன் மெய் வருத்தி நடித்து, தமிழ் சினிமாவை மேலே கொண்டு போகிறார். சினிமாவை தாண்டி எழுத்திலும் அவர் சாதித்து வருகிறார்…”, என்றார்.

பார்த்திபன் பாராட்டியது: இந்தப் பாடல் குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில், “கமல் சாருக்கு சிவாஜி எப்படியோ, அதுபோல் எனக்கு கமல் சார். ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக அவர் எழுதிய பாடலை எனக்கு போட்டு காண்பித்தார். இந்த பாடல் வெளியாவதற்கு முன், அதன் வரிகள் பிரபலமானால் நன்றாக இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன்[3].  தங்கத்தை உரசிப்பார்க்க தங்கம் அவசியம் இல்லை. பிரத்யேகமாக ஒரு கல் இருக்கிறது. அந்த கல்லாக நான் இருந்தால், மகிழ்ச்சி. நான் கல்லாக முற்படுவதற்கு காரணம், கமலின் கவிதை தங்கம் என்பதே. இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டேன். அது, வரிக்குதிரை மாதிரி அமைந்தது. குறிப்பாக இரண்டு வரிகள். “கலவி முடிந்தபின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கைஎன்ற வரிகளை ரசித்தேன்..,” என்றார்[4]. படத்தின் நாயகியான நடிகை நிஷா (திரிஷா) பாடும் பாடலாக இது அமைந்துள்ளது.

இப்பாடல் வேண்டுமென்றே ஆத்திகர்களை, நம்பிக்கையாளர்களை சீண்டிவிடுவது போல இருக்கிறது: இதற்கு பதில் தரும் வகையில் நாயகன் மேஜர் ஆர். மன்னார் (கமல்ஹாசன்) பாடும் பாடல் இது…

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்[5]

காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்[6]
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்[7]
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள்[8] திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்[9]

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே[10].

கமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது: தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் இந்த பாட்டில் வெளிப்படுகின்றன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது.

வேதபிரகாஷ்

© 19-11-2010


[1] மன்மதன் அம்பு: கமல் பாட்டும்…..வாலியின் பாராட்டும்!, வெள்ளிக்கிழமை, நவம்பர் 19, 2010, http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/19-vaali-appreciate-kamal-manmathan-ambu-lyrics.html

[2] ‘கவிதையே கவிதை எழுதுகிறது” கமலை பாராட்டிய வாலி

http://chennaionline.com/tamil/cinema/news/newsitem.aspx?NEWSID=aeef51a7-c2fc-4a95-a51e-ae8c8297b65a&CATEGORYNAME=TFILM

[4] இவருக்கும் ஒருவகையில் அனுபவம் பேசுகிறது போலும், அல்லது பழைய நினைவுகளைக் கிண்டி விடுகிறது போலும்.

[5] எந்த அளவிற்கு பல பெண்களுக்கு உதட்டோடு உதடாக முத்தமிட்டு, ………ஒழிய இத்தகைய அனுபவம் கிடைக்காது.

[6] பாத்ரூமில் அலம்பிக்கொண்ட அனுபம் சொல்கிறது போலும்.

[7] புதியதாக, இளமையாக வேண்டும் என்ற பேராசைதான், இந்த வயதிலும்.

[8] வாணி கணபதி மற்றும் நாத்திகம் என்ற போர்வையில், இருவரையும் சீண்டியுள்ளது தெரிகிறது.

[9] ஆனால் இங்கு சீண்டியுள்ளது இந்துமத உணர்வுகளைத்தான்.

[10] இங்கு மேரிக்கும், பாத்திமாக்கும் அ-இ-உ சொல்ல தைரியமில்லை. அங்கு மட்டும் என்ன பிரபந்தங்கள் படிக்கப்படாமலா உள்ளன?

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)

ஒக்ரோபர் 15, 2010

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)

தமிழகம் ஏற்கெனெவே சினிமா-அரசியல் கூட்டணியால் சீரழிந்துள்ள நிலையில், அவற்றை கம்பெனிகளக மாற்றியப் பின்னர், இவ்வாறு வியாபாரங்கள் செய்வது, ஜனநாயகத்தை பாதித்துள்ளது, சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். 

கடின உழைப்பில் மக்கள் சம்பாத்தித்து விலை உயர்வால் பாத்திக்கப்பட்டுள்ள நிலையில், மக்களது தவிப்புகளை ஆட்சியாளர்கள் நிவர்த்தி செய்ய கவலைப்படாமல், தங்களது லாபங்களைப் பெருக்கிக் கொள்ளவே இம்மாதிரி வழி செய்து வருகிறார்கள். இதுவும் அத்தகைய மக்கள் விரோத சூழ்ச்சியே ஆகும்.

இங்கு “நமிதா” மற்றும் “கருணாநிதி” அவ்வாறான உருவகங்களாக இருக்கின்றன. தனியார் கம்பெனிகள், சிபாரிசு நியமனங்கள், சமரச வியாபார விருத்தி, கொள்ளை லாபம், பரஸ்பர லாப விநியோகம், என்றுதான் இவர்கள் செயல்படுகின்றனர்.

கருணாநிதி நமிதாவை பரிந்துரைத்தாராம்: கருணாநிதி நடிகைகளைச் சுற்றி வருகிறார்களா அல்லது நடிகைகள் கருணாநிதியை வலம் வருகிறார்களா? என்னதான் அரசியல் பணிகள் ஆற்றினாலும், கூட்டணி-சூழ்ச்சிகள் புரிந்தாலும், கருணநிதிக்கு திரை/கலைப்பணிகள் மீதுள்ள ஆசையே அலாதிதான். இம்முறை பதவிக்கு வந்த பிறகு மட்டும் மூன்று நான்கு படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் அவர், தன் வசனத்துக்காக கலைமாமணி விருதே பெற்றிருக்கிறார் என்றால் அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்ளலாம்[1]. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அடுத்து இயக்கும் 50வது படமான[2] “இளைஞன்” படத்திலும் தன் கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியதோடு நிறுத்தாமல் கூடுதலாய் ஒரு சகாயமும் செய்திருக்கிறார்[3]. படத்தில் வில்லத்தனமான ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.

கருணாநிதியை பாராட்டிய நமிதா[4]: கருணநிதிக்கு நமீதா மீது அப்படியென்ன பாசம் / நேசம் / பிடிப்பு என்று தெரியவில்லை[5]. இதையறிந்த நமிதா மிகவும் மகிழ்ச்சியில் பூரித்துள்ளார்[6]. நல்லவேலை கருணநிதி போலவே யோகா செய்வதினால், பெருத்துவிடவில்லை! நமிதா கருணாநிதி பற்றி[7], “என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி[8]. அவர் ரொம்ப நல்லவர், அமைதியாக இருப்பார். தமது ஆட்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்”, என்றெல்லாம் பாராட்டியுள்ளார்! குஷ்பு கொதிப்பாரா, குதிப்பாரா  என்பது போகப்போகத்தான் தெரியும் போலிருக்கிறது[9].

CM Karunanidhi Makes Namitha A Bitch! ஆனால், ஆங்கிலத்தில் இப்படி தலைப்பு கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது[10]. ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார். “ஆங்கிலோ இந்தியப் பெண்” என்றால், ஆங்கிலேயர் மற்றும் இந்தியர்களின் கலப்பினால் உருவாகிய இனத்தைச் சேந்தவர்கள் என்று குறிக்கிறது. அதனால் அந்த வார்த்தை பிரயோகம் இருக்கலாம்!

தனது உடல், உருவம், நன்றாக, வளைவுகளுடன் / உருண்டையாக வைத்திருக்கும் மர்மம்: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைஇத்திருக்கிறேன்”, என்றார்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும்! பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி!

‘மச்சான்களுக்கு முன்பு” மயங்கி விழுந்த நமிதா[13]: நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நமீதா, கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால் காய்ச்சலை பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். நமீதாவை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நமீதா பேசமுடியாமல் தடுமாறி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை சென்னை அடையாறில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். நமீதா உடல்நிலையை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

நமிதாவிற்கு மலேரியா – சிகிச்சையளிக்கப்படுகிறதாம்: நமீதாவுக்கு சிகிச்சை அளித்து அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புனே அருகில் உள்ள ஆம்பிவேலி மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறார்கள். காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நமீதாவை இங்கே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நமீதா விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து காரில் அம்பிவேலிக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாவம், கருணாநிதி, சென்னையாக இருந்தால், நாற்காலியை உருட்டிக் கொண்டு போய் நலம் விச்சரித்திருப்பாரோ என்னமோ?

முன்பு தற்கொலை வதந்தி – நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜான் விளக்கம்: ஆம்பிவேலி என்றதும் முந்தைய செய்தி நினைவிற்கு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு, நமிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி / வதந்தி இருந்தது[14]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர் (ஜூலை 2010). ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், ஜூலை.1, 2010 அன்று, நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது. ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டபோது, அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார். எப்படியெல்லாம் வதந்திகலைக் கிளப்புகிறர்கள் மச்சான்கள்…?

கருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி? எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள்……..பெரிய குடும்பம்! முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன? எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது?


[1] தனது மீது போடப்பட்ட வழக்குகளையே, தான் முதல்வராகியதும் ஜி.ஓ போட்டு வாபஸ் வாங்கும் போது, பரிசுகள் பெறுவது என்ன முடியாத காரியமா?

[5] ஒரு வேளை குஷ்புவிற்கு கோபம் வந்தாலும் வரலாம். ஏனெனில், குஷ்புதான் கருணாநியுடன் நெருங்கிப் பழகி வருபவர். ஏற்கெனவே புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

[7] Namitha says “It’s an honour that the Chief Minister himself has handpicked me for the role. Hopefully I would fulfill his expectations by giving my best to my character in Ilaignan”. She describes her role in the movie lets listen in her words “I play a woman hailing from a mixed race- party English and partly Indian. It is a film set in the 1940s and my role could remind you that of Ramya Krishnan’s in Padayappa”. The glam doll praises the director too “He is a cool man who makes his colleagues feel comfortable. The director behind many a blockbuster of Tamil cinema, it is a delight to work with him”.

[9] வேதபிரகாஷ், கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு!, https://evilsofcinema.wordpress.com/2010/05/15/கொதிக்கும்-நமிதா-குதிக்கும்-குஷ்பு/

[10] Sexy heroine Namitha confirmed that she is going to act as a hardcore bitch in the movie ‘Ilaignan’. The story of this movie was given by Tamilnadu CM Mr. Karunanidhi, and it is going to be directed by Suresh Krishna. This movie will be made under the backdrop of 1940s. Namitha expressed her thankfulness towards Karunanidhi for portraying this memorable character exclusively keeping her looks in mind. Namitha fans are excited as well and they are hoping to see a very nice natural acting performance from Namitha.

http://www.weekendcreations.com/tollywood_talk.php?talk_id=836

[12] The ideal man for this lady is the Wolverine star Ryan Reynolds, “I would like to date Ryan Reynolds,” she smiles. Speaking on how she maintains her curves, she says, “I am not a gym person, I prefer going the Indian way by doing some yoga, which have helped me shape my curves.”

[14] வேதபிரகாஷ், நான் நலமாக இருக்கிறேன்தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு, https://evilsofcinema.wordpress.com/2010/07/01/நான்-நலமாக-இருக்கிறேன்-த/